Press "Enter" to skip to content

ஒலிம்பிக் போட்டிக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் 95 பேர் 12 விளையாட்டு பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார்கள்.

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் பல்வேறு இடங்களில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மத்திய இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் அணியும் சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.

கிரண் ரிஜிஜு

‘‘பிரதமர் மோடி ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது குறித்து தெரிந்து கொள்ள ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த அனைவருக்கும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »