ரோகித் சர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரைச் சேர்ப்பது கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவும் என்று ரிஸ்லா ரெஹான் கூறி இருந்தார்.
புதுடெல்லி:
ரிஸ்லா ரெஹான் ஒரு பாகிஸ்தான் பெண் ஆவர். ரிஸ்லா ரெஹான், துபாயில் 2018 ஆசிய கோப்பையின் போது முதன் முதலில் ஊடகம் உலகிற்கு அறிமுகமானார்.
இந்திய அணியை ஆதரிப்பதற்காக 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்கு சற்று முன்னதாக மான்செஸ்டரில் ரிஸ்லா கலந்து கொண்டார், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நியூசிலாந்துடனான இந்தியாவின் அரையிறுதி மோதலுக்கு முன்னதாக ஒரு பேட்டியில் , ரிஸ்லா பாகிஸ்தான் அணி கடைசி நான்கு போட்டிகளில் விளையாடும் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே அனுமதிச்சீட்டுகளை வாங்கியதாகக் கூறியிருந்தார்.பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என்று நினைத்துக்கொண்டேன், ஆனால் அது அவ்வாறு செயல்படவில்லை.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar