Press "Enter" to skip to content

பிரெஞ்சு ஓபன் – ஜோகோவிச், நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

பாரிஸ்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலியிம் மசெட்டியுடன் மோதினார்.

இதில் டை பிரேக்கர் வரை சென்ற முதல் 2 செட்களை மசெட்டி கைப்பற்றி அசத்தினார்.

அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் 3வது செட்டை 6-1 எனவும், 4வதுசெட்டை 6-0 எனவும் கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் ஜோகோவிச் 4-0 என முன்னிலையில் இருந்தார். அப்போது மசெட்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகினார்.   

இறுதியில், ஜோகோவிச் 6-7, 6-7, 6-1,6-0, 4-0 என செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 7-5, 6-3, 6-0 என்ற செட்கணக்கில் இத்தாலி வீரர் ஜானி சினரை வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »