Press "Enter" to skip to content

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது சோதனை – முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 258/7

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது சோதனை போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டனாக டாம் லாதம் பொறுப்பேற்று உள்ளார்.

பர்மிங்காம்:

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட சோதனை தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் சோதனை டிராவில் முடிந்தது.

இந்நிலையில், பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் இரண்டாவது சோதனை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாட்டம் தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் களமிறங்கினர். இருவ்ரும் நிதானமாக ஆடினர்.  முதல் மட்டையிலக்குடுக்கு இந்த ஜோடி 72 ஓட்டங்கள் சேர்த்தது. சிப்லி 35 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கிராலே டக் அவுட்டானார். கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னிலும், ஒல்லி போப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் மட்டையிலக்கு வீழ்ந்தாலும் ரோரி பர்ன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 81 ஓட்டத்தில் வெளியேறினார்.

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த டேனியல் லாரன்சும் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.

இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 மட்டையிலக்கு இழப்புக்கு 258 ஓட்டங்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் 67 ரன்னுடனும், மார்க் வுட் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நியூசிலாந்து சார்பில் போல்ட், ஹென்றி, படேல் தலா 2 மட்டையிலக்குடும்,  நீல் வாக்னர் ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »