Press "Enter" to skip to content

இங்கிலாந்து அணியில் மீண்டும் மோர்கன்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோர்கன் உள்பட பல வீரர்கள் விளையாடவில்லை.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கேப்டன் உள்பட முக்கியமான வீரர்கள் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய அணியை இங்கிலாந்து களம் இறக்கியது. புதிய அணி என்றாலும் பாகிஸ்தானை 3-0 என வீழ்த்தியது.

இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 16-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன் உள்பட 9 பேர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து டி20 அணி:-

1. மோர்கன், 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜேக் பால், 5. டாம் பாண்டன், 6. பட்லர், 7. டாம் கர்ரன், 8. லேவிஸ் கிரேகோரி, 9. கிறிஸ் ஜோர்டான், 10. லியம் லிவிங்ஸ்டன், 11. சகிப் மெஹ்மூத், 12. தாவித் மலான், 13. மேட் பார்கின்சன், 14. அடில் ரஷித், 15. ஜேசன் ராய், 16. டேவிட் வில்லே.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »