ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் காட்ரல் மற்றும் ஆண்ட்ரு ரசல் தலா 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினர்.
செயிண்ட்லூசியா:
ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் மூன்று போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணியும், 4-வது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது.
இந்நிலையில், 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் மட்டையாட்டம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 மட்டையிலக்கு இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. அந்த அணியில் எவின் லெவிஸ் அதிகபட்சமாக 34 பந்துகளில் 79 ரன்களும், கேப்டன் பூரன் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 20 சுற்றில் 200 ரன்களை இலக்காக கொண்டு மட்டையாட்டம் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 மட்டையிலக்கு இழப்புக்கு 183 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் ஆரோன் பின்ச் மட்டும் 34 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்று அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கும், தொடர் நாயகன் விருது ஹெய்டன் வால்ஷுக்கும் அளிக்கப்பட்டது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar