Press "Enter" to skip to content

முதல் பந்திலேயே சிக்சர்… அறிமுக போட்டியில் அரை சதம் விளாசிய இஷான் கிஷன்

அறிமுகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.

கொழும்பு:

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 மட்டையிலக்குடுகளை இழந்த 262 ஓட்டங்கள் எடுத்தது. 263 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

அறிமுக வீரர் இஷான் கிஷன், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இஷான் கிஷன், 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் விரைவாக அரை சதம் கடந்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 26 பந்துகளில் அரை சதம் அடித்த குருணால் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் அரை சதம் அடித்ததன்மூலம், அறிமுகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார். சர்வதேச டி20 அறிமுக போட்டியின்போது முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷன் தனது பிறந்தநாளான இன்று கிரிக்கெட்டில் புதிய சாதனைகளை படைத்திருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »