Press "Enter" to skip to content

மொயின் அலி, ஜோஸ் பட்லர் அபாரம் – 2வது டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் மொயின் அலி அதிரடியாக ஆடி 36 ரன்களை எடுத்ததுடன், சிறப்பாக பந்து வீசி 2 மட்டையிலக்குடுகளையும் சாய்த்தார்.

லீட்ஸ்:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி லீட்சில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 19.5 சுற்றில் 200 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. கேப்டன் ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி 39 பந்தில் 59 ஓட்டங்கள் எடுத்தார். மொயின் அலி அதிரடியாக ஆடி 16 பந்தில் 36 ஓட்டங்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் மொகமது ஹஸ்னன் 3 மட்டையிலக்குடும், இமாத் வாசிம், ஹரிஸ் ராப் தலா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் அதிகபட்சமாக 37 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழந்தார். ஷதாப் கான் 36 ஓட்டத்தை எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.  இதனால் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை1-1 என சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து சார்பில் சாகிப் மக்மூத்3 மட்டையிலக்குடும், அடில் ரஷீத், மொயின் அலி தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது மொயின் அலிக்கு வழங்கப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி 20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »