Press "Enter" to skip to content

டோக்கியோ ஒலிம்பிக்: குதிரையேற்றம், கோல்ப் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்-வீராங்கனைகள் விவரம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்றம், கோல்ப் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் குறித்த செய்தியை காணலாம்.

பவுத் மிர்சா – குதிரையேற்ற வீர‌ரான இவருக்கு வயது 29. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1992 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. உலக அரங்கில் குதிரையேற்றத்தில் பவுத் மிர்சா பிடித்துள்ள இடம் 78

அனிர்பன் லஹிரி – குழிப்பந்தாட்ட (கோல்ப் )வீர‌ரான இவருக்கு வயது 34. புனேவில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவர், உலக அரங்கில் 348 வது இடத்தில் உள்ளார்.

உதயன் மனே – குழிப்பந்தாட்டவீர‌ரான இவருக்கு வயது 30. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர். உலக தர வரிசையில் தற்போது 360 வது இடத்தில் உள்ளார்.

அதிதி அசோக் – குழிப்பந்தாட்ட வீராங்கனையான இவருக்கு வயது 23 . கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1998 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பிறந்தவர். உலக தர வரிசையில் 178 வது இடத்தில் உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »