Press "Enter" to skip to content

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடங்கியது- முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சு

தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

 சென்னை:

ஐந்தாவது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில்
ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற
சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் கோவை கிங்ஸ் அணி முதலில் மட்டையாட்டம் செய்கிறது. துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு அதிரடியாக ஆடினார். 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்த அவர்,
கணேஷ் மூர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கவின், சாய் சுதர்சன் ஆகியோர் நிதானமாக விளையாடினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »