Press "Enter" to skip to content

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதல்

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன், சோனு யாதவ், அலெக்சாண்டர், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.

சென்னை:

8 அணிகள் பங்கேற்ற 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு தொடங்கியது.

பார்வையாளர்கள் இல்லாமல் நடந்த இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின.

முதலில் கோவை அணி விளையாடியது. அந்த அணி வீரர் சாய் சுதர்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 87 ஓட்டங்கள் (8 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார்.

கோவை அணி 18 ஓவர்களில் 5 மட்டையிலக்கு இழப்புக்கு 168 ஓட்டத்தை எடுத்து இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

டி.என்.பி.எல். போட்டி 2-வது லீக் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன், சோனு யாதவ், அலெக்சாண்டர், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.

இதில் என்.ஜெகதீசன் டி.என்.பி.எல். போட்டியில் அதிக ஓட்டத்தை எடுத்த வீரராக உள்ளார். அவர் 32 பந்துவீச்சு சுற்றில் 1352 ஓட்டத்தை எடுத்து உள்ளார். சராசரி 54.08 ஆகும். ஒரு சதமும், 14 அரை சதமும் அடித்துள்ளார். மட்டையிலக்கு கீப்பரான அவர் 21 கேட்ச் பிடித்துள்ளார். 13 ஸ்டம்பிங் செய்து உள்ளார். இதனால் ஜெகதீசன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இலங்கை தொடருக்கான இந்திய அணியுடன் வலைப் பயிற்சியில் பந்து வீச்சாளராக சென்றிருக்கும் சாய் கிஷோர், சந்திப் வாரியர் ஆகியோர் அந்த தொடர் முடிந்ததும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இணைகிறார்கள்.

எம்.முகமது தலைமையில் பெயர் மாற்றத்துடன் களம் காணும் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்கு வர்ணனையாளராக பணியாற்றுவதால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். வலுவான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சவாலை சமாளிப்பது திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி விண்மீன் விளையாட்டு தமிழ், விண்மீன் விளையாட்டு 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »