Press "Enter" to skip to content

டி.என்.பி.எல்.: ஆர். சதீஷ் பந்தில் திண்டாடியது திருப்பூர் தமிழன்ஸ்

தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மித-வேகப்பந்து வீச்சாளர் சதீஷ் 10 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 மட்டையிலக்கு சாய்த்தார்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சதீஷ் வீசினார். 2-வது பந்திலேயே தினேஷ் டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்த சுற்றில் சித்தார்த் ஒரு ஓட்டத்தில் வெளியேறினார்.

3-வது ஓவரை சதீஷ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் அரவிந்த் 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் பிரான்சிஸ் ரோகின்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

சதீஷ் அவரின் 3-வது சுற்றில் 1 மட்டையிலக்குடும், 4-வது சுற்றில் ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினார். இதனால் 4 சுற்றில் 10 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 மட்டையிலக்கு சாய்த்தார். சதீஷ் ஐந்து வீக்கெட் வீழ்த்தியதால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 சுற்றில் 30 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 மட்டையிலக்குடுக்களை இழந்து தடுமாறியது.

12 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 44 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »