Press "Enter" to skip to content

276 ஓட்டத்தை வெற்றி இலக்கு: மளமளவென மட்டையிலக்குடுகளை இழந்த இந்தியா

இலங்கை அணி 275 ஓட்டங்கள் குவித்த நிலையில் தவான், பிரித்வி ஷா, இஷான் கிஷன் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்த இலங்கை அணி 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 275 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ 50 ர ன்கள், அசலங்கா 65, கருணாரத்னே ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் புவி 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்குடும், சஹல் 50 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

பின்னர் 276 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா (13), ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 12 சுற்றில் இந்தியா 65 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 மட்டையிலக்கு இழந்தது.

4-வது மட்டையிலக்குடுக்கு மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 50 ஓட்டங்கள் சேர்த்தது. இந்தியா 17 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

18-வது ஓவரின் 2-வது பந்தில் மணிஷ் பாண்டே 31 பந்தில் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். பாண்ட்யா வந்த வேகத்திலேயே டக்அவுட்டில் வெளியேறினார்.

இதனால் இந்தியா 116 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 மட்டையிலக்குடுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »