Press "Enter" to skip to content

சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் அசத்தல் – இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கொழும்பு:

இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது.

டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்த இலங்கை அணி 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 275 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ 50 ர ன்கள், அசலங்கா 65, கருணாரத்னே ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் சேர்த்தனர்.

இந்திய அணி சார்பில் புவி, சஹல் தலா 3 மட்டையிலக்குடுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 276 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா (13), ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 12 சுற்றில் இந்தியா 65 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 மட்டையிலக்கு இழந்தது.

4-வது மட்டையிலக்குடுக்கு மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 50 ஓட்டங்கள் சேர்த்தது. 

மணீஷ் பாண்டே 37 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டத்தில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டானார்.  குருணால் பாண்ட்யா 35 ஓட்டத்தில் பெவிலியன் திரும்பினார். இதனால் 193 ரன்களுக்கு 7 மட்டையிலக்குடுகளை இழந்து இந்தியா தத்தளித்தது.

8வது மட்டையிலக்குடுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது. சாஹர் 66 பந்துகளில் அரை சதமடித்தார். இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில், இந்தியா 7 மட்டையிலக்கு இழப்புக்கு 277 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. 

தீபக் சாஹர் 69 ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 84 ஓட்டங்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »