Press "Enter" to skip to content

நெல்லை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது திருச்சி அணி

டிஎன்பிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணிக்கு எதிராக நெல்லை அணி அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்து 77 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் 

மோதின. முதலில் ஆடிய திருச்சி அணி, 20 ஓவர்களில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 151 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அமித் சாத்விக் 71 ஓட்டங்கள் விளாசினார். 

ஆதித்ய கணேஷ் 33 ஓட்டங்கள், அந்தோணி தாஸ் 35 ஓட்டங்கள் (நாட் அவுட்) எடுத்தனர். 

இதையடுத்து 152 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய நெல்லை அணி அடுத்தடுத்து மட்டையிலக்குடுகளை இழந்தது. 12 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 மட்டையிலக்குடுகளை 

இழந்து தடுமாறிய நெல்லை அணி, மீதமுள்ள மட்டையிலக்கு காப்பாற்ற கடுமையாக போராடியது. 6வது மட்டையிலக்கு ஜோடியான பாபா இந்திரஜித்-சஞ்சய் யாதவ் 

நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடினர். இதனால் ஓரளவு நம்பிக்கை பிறந்தது. 

ஆனால், சஞ்சய் யாதவ் 28 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஓட்டத்தை அவுட் ஆனார். பாபா இந்திரஜித் 32 ஓட்டங்களில் மட்டையிலக்குடை இழந்தார். மற்ற 

வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, நெல்லை அணி 13.4 ஓவர்களில் 77 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் திருச்சி அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 

அபார வெற்றி பெற்றது. இந்த பருவத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி 2 புள்ளிகளைப் பெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »