Press "Enter" to skip to content

டோக்கியோ ஒலிம்பிக்: சாஃப்ட்பால் போட்டியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா வெற்றி

பெண்களுக்கான சாஃப்ட்பால் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், தற்போது வரை ஆறு போட்டிகள் முடிவடைந்துள்ளன.

டோக்கியோ:-

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அதிகாரப்பூர்வமாக நாளை  தொடங்கும் நிலையில், நேற்று தொடக்க சுற்றாக  மகளிர் சாஃப்ட்பால் விளையாட்டு   தொடங்கியது. இன்று மூன்று ஓபனிங் ரவுண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில்  அமெரிக்கா – கனடா அணிகள் மோதின. இப்போட்டியில் 7 சுற்றுகளில் அமெரிக்கா  1 ஓட்டத்தை எடுத்து வெற்றி பெற்றது.

இரண்டாவதாக, மெக்சிகோ – ஜப்பான் அணிகள் மோதியதில், 8 சுற்றுகலில் ஜப்பான் 3 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இதில், மெக்சிகோ 2 ஓட்டங்கள் எடுத்தது.

மூன்றாவதாக, இத்தாலி – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆஸ்திரேலியா ஒரு ஓட்டத்தை எடுத்து வெற்றி பெற்றது. இத்தாலி ஓட்டத்தை அடிக்கவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் ஜப்பான், அமெரிக்கா, கனடா அணிகள் வெற்றி பெற்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »