பெண்களுக்கான சாஃப்ட்பால் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், தற்போது வரை ஆறு போட்டிகள் முடிவடைந்துள்ளன.
டோக்கியோ:-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அதிகாரப்பூர்வமாக நாளை தொடங்கும் நிலையில், நேற்று தொடக்க சுற்றாக மகளிர் சாஃப்ட்பால் விளையாட்டு தொடங்கியது. இன்று மூன்று ஓபனிங் ரவுண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின. இப்போட்டியில் 7 சுற்றுகளில் அமெரிக்கா 1 ஓட்டத்தை எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாவதாக, மெக்சிகோ – ஜப்பான் அணிகள் மோதியதில், 8 சுற்றுகலில் ஜப்பான் 3 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இதில், மெக்சிகோ 2 ஓட்டங்கள் எடுத்தது.
மூன்றாவதாக, இத்தாலி – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆஸ்திரேலியா ஒரு ஓட்டத்தை எடுத்து வெற்றி பெற்றது. இத்தாலி ஓட்டத்தை அடிக்கவில்லை.
நேற்றைய ஆட்டத்தில் ஜப்பான், அமெரிக்கா, கனடா அணிகள் வெற்றி பெற்றன.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar