Press "Enter" to skip to content

டிஎன்பிஎல் 4-வது லீக் ஆட்டம்… திண்டுக்கல் அணியை 96 ஓட்டங்களில் சுருட்டியது மதுரை

டிஎன்பிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மதுரை அணி தரப்பில் கவுசிக், ராமலிங்கம் ரோகித் ஆகியோர் தலா 3 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினர்.

சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற மதுரை அணி, திண்டுக்கல் அணியை முதலில் மட்டையாட்டம் செய்யும்படி அழைத்தது. அதன்படி மட்டையாட்டம் செய்த திண்டுக்கல் அணி, மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 96 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக மட்டையிலக்கு கீப்பர் மணி பாரதி 26 ஓட்டங்கள் சேர்த்தார். ஹரி நிஷாந்த் 19 ரன்களும், விவேக் 11 ரன்களும் அடித்தனர்.

மதுரை அணி தரப்பில் கவுசிக், ராமலிங்கம் ரோகித் ஆகியோர் தலா 3 மட்டையிலக்குடுகளையும், கிரண் ஆகாஷ், சிலம்பரசன் ஆகியோர் தலா 2 மட்டையிலக்குகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 97 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »