Press "Enter" to skip to content

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது சோதனை ரத்து – காரணம் இதுதான்

இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

மான்சஸ்டர்,

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி சோதனை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மான்சஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கவிருந்தது. 

இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ‘5வது சோதனை போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் இருக்கும் என்பதை அறிகிறோம். எனவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது குறித்த மேலும் தகவல்களை விரைவில் தெரிவிப்போம்’ என்று தெரிவித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »