Press "Enter" to skip to content

ஐ.பி.எல். 2021: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ரூதர்போர்டு

இங்கிலாந்து அணியின் மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேனான பேர்ஸ்டோவ் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளதால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மாற்று ஏற்பாட்டை செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனாவின் 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டது.  மே மாதம் முதல் வாரத்தில் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடரின் முதல் பகுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 2-வது பகுதி ஆட்டங்கள் வருகிற 19-ந்தேதி தொடங்குகின்றன.

கொரோனா மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் வருவதால் பெரும்பாலான சர்வதேச முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளனர். இங்கிலாந்து அணியின் முன்னணி மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேனான பேர்ஸ்டோவ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

முதல் பகுதியின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிய நிலையில், தற்போது 2-வது பகுதி ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ரூதர்போர்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »