Press "Enter" to skip to content

‘இந்தியாவுக்காக விளையாடப்போகும் மிக முக்கியமான வீரர் அவர்’- புகழாரம் சூட்டிய விராட் கோலி

கொல்கத்தாவின் மிரட்டலான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி.

அபுதாபி:

ஐபிஎல் தொடரின் 2021 சீசனின் இரண்டாம் பகுதி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் அபுதாபியில் போட்டி நடந்தது.

இந்தப் போட்டியில் ஆர்.சி.பி படுதோல்வியடைந்தது. கொல்கத்தாவின் மிரட்டலான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. அவர் 4 சுற்றுகள் வீசி 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்குடுகள் வீழ்த்தி அசத்தினார்.

போட்டி முடிந்த பின்னர் வருண் குறித்து கோலி, ‘அவரின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. நான் சக வீரர்களிடமும் அவரைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தேன். அவர் இந்தியாவுக்காக விளையாடும் போது மிக முக்கியமான வீரராக இருக்கப் போகிறார்.

அவரைப் போன்று பல இளம் வீரர்களும் தங்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். அப்போதுதான் இந்திய அணி வலுவாக இருக்கும். அவர் விரைவில் இந்தியாவுக்காக விளையாட உள்ளார். அது நல்ல விஷயமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »