Press "Enter" to skip to content

கார்த்திக் தியாகி அபார பந்து வீச்சு – 2 ஓட்டத்தை வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் முதல் மட்டையிலக்குடுக்கு 120 ஓட்டங்கள் சேர்த்தனர்.

துபாய்:

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 சுற்றில் 185 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் அனது.

லீவிஸ் 36 ரன், ஜெய்ஸ்வால் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ஓட்டத்தில் வெளியேறினார்.

மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ஓட்டங்கள் விளாசினார். ரியான் பராக் 4 ரன், ராகுல் டெவாட்டியா 5 ரன்னிலும் கிறிஸ் மோரிஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 மட்டையிலக்குடும், ஷமி 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடினர். அகர்வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். 

பஞ்சாப் அணியின் எண்ணிக்கை 120 ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் 49 ஓட்டத்தில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் மயங்க் அகர்வால் 67 ஓட்டத்தில் வீழ்ந்தார்.

அடுத்து இறங்கிய மார்கிராம், நிகோலஸ் பூரன் இணைந்து பொறுப்புடன் ஆடினர். பூரன் 32 ஓட்டத்தில் அவுட்டானார். 

இறுதியில், பஞ்சாப் 20 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்புக்கு 184 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோற்றது. மார்கிராம் 26 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதன்மூலம் கடைசி சுற்றில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »