கவுண்டிக் கிரிக்கெட், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் தொடரில் தொடர்ந்து விளையாடுவதாக இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
அபுதாபி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி. ஆல்ரவுண்டரான அவர் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் செnனை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் மொயின் அலி, தான் சோதனை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கவுண்டிக் கிரிக்கெட், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் தொடரிலும் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இங்கிலாந்து அணி பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் மற்றும் சோதனை அணி கேப்டன் ஜோரூட் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
34 வயதான மொயின் அலி சோதனை கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதுவரை 64 சோதனைடில் விளையாடி உள்ளார். 2,914 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதம், 14 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக ஒரு பந்துவீச்சு சுற்றில் 155 ஓட்டத்தை எடுத்துள்ளார். 195 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி உள்ளார்.
வரும் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஆசஷ் தொடர் ஆகியவற்றுக்காக நீண்ட நாட்கள் சுற்றுப்பயணத்தில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் சோதனை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக தெரிகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar