Press "Enter" to skip to content

சஞ்சு சாம்சன் அதிரடியால் ஐதராபாத்துக்கு 165 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்

அதிரடி ஓவர்களான கடைசி நான்கு ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அதிக ஓட்டங்கள் குவிக்க முடியாததால் 165 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்தார்.

அந்த அணியின் எவின் லீவஸ் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். எவின் லீவஸ் 6 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஜெய்ஸ்வால் 23 பந்தில் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் 8.4 சுற்றில் 67 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அவர் 41 பந்தில் அரைசதம் அடித்தார்.

16 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 133 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 17-வது சுற்றில் 10 ரன்களும், 18-வது சுற்றில் 10 ரன்களும் சேர்த்தது. புவி வீசிய 19-வது சுற்றில் 7 ஓட்டங்கள் மட்டுமே அடித்தது. கடைசி ஓவரின் 2-வது பந்தில் சஞ்சு சாம்சன் 82 ஓட்டங்கள் (57 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்ஸ்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த சுற்றில் 2 மட்டையிலக்குடை இழந்து 4 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »