Press "Enter" to skip to content

ஐ.பி.எல். 2021: லீக் சுற்றின் கடைசி இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் என அறிவிப்பு

சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற இருக்கின்றன.

ஐ.பி.எல். 2021 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கின்றன. கடைசி நாளான 8-ந்தேதி இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

முதல் போட்டி அபு தாபியில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும். இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் அணிகளும், துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

தற்போது இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில், அதாவது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏதாவது ஒரு போட்டியை மட்டுமே நேரலையாக பார்த்து ரசிக்க முடியும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »