சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக மட்டையிலக்கு சாய்த்தவர் என்ற பெருமையை பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி 7-வது வெற்றியை பெற்றது.
துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 149 ஓட்டத்தை எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 150 ஓட்டத்தை இலக்காக இருந்தது.
இவின் லீவிஸ் 37 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஷ்வால் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்ஷல் படேல் 3 மட்டையிலக்குடும், யசுவேந்திர சாகல், சபாஷ் அகமது தலா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 17.1 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேக்ஸ்வெல் 30 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி 1 சிக்சர்), ஸ்ரீகர் பரத் 35 பந்தில் 44 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பெங்களூர் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 7-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் 3 மட்டையிலக்கு கைப்பற்றியதன் மூலம் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீரர் ஹர்ஷல் படேல் 26 மட்டையிலக்குடை எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். 11 ஆட்டத்தில் அவர் 26 மட்டையிலக்கு எடுத்துள்ளார். இதன்மூலம் ஹர்ஷல் படேல் ஐ.பி.எல். போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக மட்டையிலக்கு சாய்த்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் இதே பெங்களூர் அணியை சேர்ந்த யசுவேந்திர சாகல் 23 மட்டையிலக்கு கைப்பற்றி இருந்தார். அதை ஹர்ஷல் படேல் முறியடித்தார்.
ஒரு பருவத்தில் அதிக மட்டையிலக்குடை கைப்பற்றிய வீரராக பிராவோ உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான அவர் 2013 ஐ.பி.எல்.லில் 32 மட்டையிலக்கு கைப்பற்றினார். அவரது சாதனையை நோக்கி ஹர்ஷல் படேல் செல்கிறார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar