Press "Enter" to skip to content

பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைப்பது யார்? கொல்கத்தா- பஞ்சாப் இன்று மோதல்

பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெற்றிபெற வேண்டி இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கும் 45-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

கொல்கத்தா 11 ஆட்டத்தில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும், பஞ்சாப், 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும் உள்ளது.

பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டும்.

இதனால் அந்த அணிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மோத உள்ளன. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »