Press "Enter" to skip to content

மேக்ஸ்வெல் அதிரடி: பஞ்சாப் அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்.சி.பி.

ராயல் சேலஞ்சர்ஸ் பவர்பிளேயில் மட்டையிலக்கு இழப்பின்றி 55 ஓட்டங்கள் எடுத்த போதிலும், மிடில் ஓவர்களில் திணறியதால் இறுதியில் 164 ஓட்டங்கள் எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. ஆர்.சி.பி. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்தது.

அதன்படி விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பவர்பிளேயான முதல் 6 சுற்றில் மட்டையிலக்கு இழப்பின்றி 55 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதனால் ஆர்.சி.பி. எப்படியும் 175 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் பஞ்சாப் வீரர்கள் சிறப்பாக பந்து வீச ஆர்.சி.பி. அணியால் ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை. 10-வது ஓவரை ஹென்ரிக்ஸ் வீசினார். இந்த சுற்றில் விராட் கோலி (25), கிறிஸ்டியன் (0) மட்டையிலக்குடை வீழ்த்தினார். 12-வது ஓவரை வீசிய ஹென்ரிக்ஸ் 4-வது பந்தில் படிக்கல் (40) ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 2 சுற்றில் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

ஆர்.சி.பி. கடைசி 6 சுற்றில் 18 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 12 சுற்றில் 73 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 4-வது மட்டையிலக்குடுக்கு மேக்ஸ்வெல் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் மீண்டும் ஸ்கோர் வேகம் எடுத்தது. மேக்ஸ்வெல் 29 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 18.1 சுற்றில் 146  ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டி வில்லியர்ஸ் 23 ஓட்டத்தில் வெளியேறினார்.

கடைசி சுற்றில் மேக்ஸ்வெல் 33 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெடடுக்கு 73 ஓட்டங்கள் சேர்க்க ஆர்.சி.பி. 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »