Press "Enter" to skip to content

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வழக்கம் போல் கடைசி நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டையிலக்குடுகளை இழக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 48-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் மட்டையாட்டம் செய்த ஆர்.சி.பி. 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 164 ஓட்டங்கள் சேர்த்தது. அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 33 பந்தில் 57 ஓட்டங்கள் அடித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் முகமது ஷமி, ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 3 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

பின்னர் 165 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஸ்கோர் 10.5 சுற்றில் 91 ரன்னாக இருக்கும்போது கே.எல். ராகுல் 35 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரண் 3 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தார்.

சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 42 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 15.2 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் பஞ்சாப் அணியால் வெற்றி நோக்கி செல்ல முடியவில்லை.

கே.எல். ராகுல் அவுட்

கடைசி சுற்றில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் 12 ஓட்டங்கள் அடிக்க 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 158 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »