கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் மட்டையாட்டம் தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் ஜேசன் ராய், விருத்திமான் சாகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாகா முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 10 ஓட்டத்தில் வெளியேறினார்.
கேன் வில்லியம்சன் 26 ஓட்டத்தில் ரன்அவுட் மூலம் வெளியேற, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தடுமாற ஆரம்பித்தது. அப்துல் சமாத் 25 ரன்களும், பிரியம் கார்க் 21 ரன்களும் அடிக்க, அந்த அணியில் 20 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிம் சவுத்தி, ஷிம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar