Press "Enter" to skip to content

ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை? பஞ்சாப் அணிக்கு 135 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டூ பிளெசிஸ் அரை சதம் அடித்தார்.

துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து சென்னை அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய சென்னை அணி அடுத்தடுத்து மட்டையிலக்குடுகளை இழந்தது. கெய்க்வாட் 12, மொயீன் அலி 0, அம்பதி ராயுடு 4, ராபித் உத்தப்பா 2, டோனி 12 என சென்னை அணி வரிசை கட்டி மட்டையிலக்குடுகளை இழந்தது. 12 சுற்றில் 5 மட்டையிலக்குடுகளை இழந்து 61 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது. 

ஒரு முனையில் மட்டையிலக்குடுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய டூ பிளெசிஸ் அரை சதம் அடித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்குடுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. 

பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் சிறப்பாக பந்து வீசி 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர். இதையடுத்து 135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »