Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிராக 171 ஓட்டங்கள் குவித்தது கொல்கத்தா

கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ஷுப்மான் கில்-வெங்கடேஸ் அய்யர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஷார்ஜா:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. துவக்க வீரர்கள் ஷுப்மான் கில்-வெங்கடேஸ் அய்யர்  இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளம் அமைத்தனர். 79 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. வெங்கடேஸ் அய்யர் 38 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 12 ஓட்டங்களில் அவுட் ஆனார். அரை சதம் கடந்த ஷுப்மான் கில் 56 ஓட்டங்களில் மட்டையிலக்குடை இழந்தார்.

அதன்பின்னர் ராகுல் திரிபாதி 21 ஓட்டங்கள், தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்கள் (நாட் அவுட்), மார்கன் 13 ஓட்டங்கள் (நாட் அவுட்) சேர்க்க, கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 171 ஓட்டங்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் கிறிஸ் மோரிஸ், சேட்டன் சகாரியா, ராகுல் தேவாட்டியா, பிலிப்ஸ் தலா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »