தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.
துபாய்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 98 ஓட்டங்கள் விளாசினார்.
இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வு நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், தனது காதலிக்கு மோதிரம் அணிவித்து, காதலை வெளிப்படுத்தினார். அப்போது டோனியின் மனைவி சாக்சி மற்றும் உடனிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தனர்.
A special moment for @deepak_chahar9! 💍 💛
Heartiest congratulations! 👏 👏#VIVOIPL | #CSKvPBKS | @ChennaiIPLpic.twitter.com/tLB4DyIGLo
— IndianPremierLeague (@IPL)
சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தீபக் சாஹர் இந்த போட்டியில் 4 சுற்றுகள் பந்து வீசி, 48 ஓட்டங்கள் கொடுத்து ஒரு மட்டையிலக்கு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar