Press "Enter" to skip to content

ஐபிஎல் 2021 – பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை

டெல்லி அணிக்கு எதிராக சென்னை அணியின் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது.

துபாய்:

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று துபாயில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதல் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.

பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 60 ரன்னும் எடுத்தார். ஹெட்மையர் 37 ஓட்டங்கள் அடித்தார். ரிஷாப் பண்ட் 51 ஓட்டத்தை எடுத்து அவுட்டாகாமால் இருந்தார்.

சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 மட்டையிலக்குடும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டுபிளசிஸ் ஒரு ஓட்டத்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடினார். அவர் 44 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 63 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ஓட்டத்தை எடுக்காமலும், அம்பதி ராயுடு ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் மட்டையிலக்கு வீழ்ந்தாலும் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 70 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், சென்னை அணி 4 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »