Press "Enter" to skip to content

ஒரு பருவத்தில் அதிக மட்டையிலக்கு – பிராவோ சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் பட்டேல்

கொல்கத்தா அணியிடம் தோற்றதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

சார்ஜா:

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி கடைசி சுற்றில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. இதன்மூலம் குவாலிபையர் 2 சுற்றுக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 2 மட்டையிலக்கு வீழ்த்தினார். இதன்மூலம் நடப்பு தொடரில் அவரது மட்டையிலக்கு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இதையடுத்து, ஐ.பி.எல். போட்டியில் ஒரு பருவத்தில் அதிக மட்டையிலக்கு வீழ்த்தியவரான சென்னை வீரர் வெய்ன் பிராவோவின் (2013-ம் ஆண்டில் 32 மட்டையிலக்கு) சாதனையை சமன் செய்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »