டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணிக்கான சீருடையை நாளை அறிமுகம் செய்கிறது பி.சி.சி.ஐ.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த 7-வது பருவம் தொடங்குவதற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்தத் தொடரில் இந்திய அணி புது சீருடை அணிந்து விளையாட இருக்கிறார்கள். அந்த சீருடையை நாளை அறிமுகம் செய்கிறது பி.சி.சி.ஐ.
இந்தியா வருகிற 24-ந்தேதி முதல் ஆட்ட பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 17-ந்தேதி உலகக்கோப்பை தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 18-ந்தேதி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியின்போது இந்திய வீரர்கள் புது சீருடையை அணிந்து விளையாடுவார்கள்.
அயர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை அணிகள் உலகக்கோப்பைக்கான சீருடையை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar