Press "Enter" to skip to content

சுனில் நரைனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் புகழாரம்

ஆர்.சி.பி. அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேற சுனில் நரைன் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. கேப்டன் விராட் கோலி மட்டையாட்டம் தேர்வு செய்தார். 

அதன்படி, முதலில் ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்னும், தேவ்தத் படிக்கல் 21 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 4 மட்டையிலக்குடும், பெர்குசன் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். ஆட்டத்தில், 18-வது ஓவரை வீசிய முகமது சிராஜ், சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இறுதியில், கொல்கத்தா அணி 4 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது. மேலும் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை கொல்கத்தா எதிர்கொள்கிறது.

ஆர்.சி.பி. அணிக்கு எதிரான வெற்றி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில்  ‘‘எங்களது  வெற்றியை நரைன் பந்துவீச்சிலும், மட்டையாட்டம்கிலும் மிக சுலபமாக்கிவிட்டார்.  தொடர்ந்து விளையாடி அதிக மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார்.  ஆட்டத் தொடக்கத்திலிருந்தே பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். இலக்கை எட்டும்போது செய்யும்போதும் மட்டையிலக்குடுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

உலகத்தரம் வாய்ந்த நரைன், வருண் சக்ரவர்த்தி, சாஹிப் அல் ஹசன் ஆகிய 3 பேருடன் சேர்ந்து விளையாடுவது என்பது கவுரவம்தான்.  அவர்கள் மேலும் சிறப்பாக விளையாட என்னுடைய வாழ்த்துகள்.  எங்களுடைய மட்டையாட்டம் வரிசை மிகவும் பலமானது. எங்களுடைய மட்டையாட்டம் வரிசை பலமானதாக இருக்கிறது. தகுதிச்சுற்று 2-ல் இதே ஷார்ஜா மண்ணில் டெல்லி கேபிடல்ஸ் அணியை   எதிர்கொள்கிறோம்..

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட திறமையை வெளிகாட்டி ரசிகர்களை வியக்கும்படி செய்கின்றனர். அதில், நரைன் தனது தனிப்பட்ட திறமைகளை சற்று கூடுதலாக  காட்டுவார். அவர் சிறப்பான வீரர்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »