Press "Enter" to skip to content

தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

கேப்டன் சுனில் சேத்ரி இரண்டு கோல்கள் அடிக்க மாலத்தீவை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.

மாலத்தீவில்  தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் மாலத்தீவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்விர் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக 45-வது நிமிடத்தில் மாலத்தீவு கோல் அடித்தது. இதனால் இந்தியா- மாலத்தீவு1-1 என சமநிலை பெற்றன.

2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் அபாரமாக விளையாடினார். அவர் 62 மற்றும் 71-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சுனில் சேத்ரி 124 போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »