Press "Enter" to skip to content

ஐ.பி.எல். அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம்

இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ந் தேதி துபாயில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.

வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம்பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த பருவத்தில் விளையாடும்.

ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் ஒப்பந்தம் நடைமுறையை கிரிக்கெட் வாரியம் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.

இந்த நிலையில் ஐ.பி.எல். அணியை வாங்க பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்த கிளப் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது.

மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் கிரிக்கெட் அணியை வாங்கும்பட்சத்தில் ஐ.பி.எல். புகழ் மேலும் விரிவடையும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஐ.பி.எல். அணிகளுக்கான ஒப்பந்தம் தேதியை கிரிக்கெட் வாரியம் நீட்டித்து இருந்தது.

புதிய ஐ.பி.எல். அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5-ந் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கான காலக்கெடு 20-ந் தேதி வரை நீட்டித்தது.

இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ந் தேதி துபாயில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு புதிய அணிகள் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய மைதானத்தை கொண்டிருக்கும் அகமதாபாத் நகரின் பெயரில் ஒரு அணி உருவாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »