182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, துவக்கம் முதலே வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
அல் அமீரத்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் முதல் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘பி’ பிரிவில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 181 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் மஹ்முதுல்லா 50 ஓட்டங்கள் சேர்த்தார். ஷாகிப் அல் ஹசன் 46 ஓட்டங்கள், லித்தன் தாஸ் 29 ஓட்டங்கள் சேர்த்தனர்.
இதையடுத்து 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, துவக்கம் முதலே வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முதன்மையான வாங்குதல் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 29 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 மட்டையிலக்குடுகள் வீழ்ந்தன.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கிப்லின் டோரிகா ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி அரை சதத்தை நெருங்கினார். எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பப்புவா நியூ கினியா அணி 97 ஓட்டங்களில் சுருண்டது. கிப்லின் டோரிகா 34 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ஓட்டங்கள் சேர்த்தார்.
வங்காளதேசம் அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாகிப் அல் ஹசன் 4 மட்டையிலக்கு வீழ்த்தினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar