Press "Enter" to skip to content

நிருபர் கேள்வியால் அதிர்ச்சி ரியாக்சன் கொடுத்த கோலி – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

அடுத்த போட்டியில் இஷான் கிஷனை அணியில் சேர்த்துவிட்டு ரோகித் சர்மா நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு கோலி ஆவேசமாக பதிலளித்தார்.

துபாய்:

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் இரண்டாம் குழு (குரூப்-2) பிரிவில் இந்திய அணியை 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 151 ஓட்டங்கள் சேர்த்தது. 158 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, மட்டையிலக்கு இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ஓட்டங்கள் சேர்த்து 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிருபர் ஒருவர் ‘அடுத்த போட்டியில் மிக சிறப்பான பார்மில் இருக்கும் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டு, ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா..?’ என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிர்ச்சி ரியாக்சன் கொடுத்து  ‘இந்த கேள்வியை தெரிந்துதான் கேட்டீர்களா?….  டி-20 போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற அபாரமான ஆட்டக்காரரை நீக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா..?’ என கேட்டு சிரித்தார். 

அதனையடுத்து அந்த கேள்வியை கேட்ட நிருபரிடம்,  ‘உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் என்னிடம் முதலிலேயே கூறிவிடுங்கள், அப்போது தான் நானும் நீங்கள் நினைப்பதை போல சர்ச்சை ஏற்படுமாறு பதில் கூறுவேன்’ என கிண்டலடித்தார். இந்த சம்பவம் குறித்தான காணொளிவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தற்போது மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »