Press "Enter" to skip to content

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

பாலி:

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள யோனி லியை (ஜெர்மனி) சந்தித்தார். 37 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-18 என்ற நேர்செட்டில் யோனி லியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 14-21, 21-19 என்ற செட் கணக்கில் கிறிஸ்டோ போபோவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »