Press "Enter" to skip to content

மும்பை இந்தியன்ஸ், ஆர்.சி.பி. அணிகள் தக்கவைத்த வீரர்கள் விவரம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற இருக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள 8 அணிகள் தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

அந்த வகையில் ஆர்.சி.பி. அணி விராட் கோலி (ரூ. 15 கோடி), மேக்ஸ்வெல் (ரூ. 11 கோடி), முகமது சிராஜ் (ரூ. 7 கோடி) ஆகிய மூவரை தக்க வைத்துள்ளது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ. 57 கோடி மீதம் உள்ளது.

மும்பை அணி ரோகித் சர்மா (ரூ. 16 கோடி), பும்ரா (ரூ. 12 கோடி), சூர்ய குமார் யாதவ் (ரூ. 8 கோடி), பொல்லார்ட் (ரூ. 6 கோடி) ஆகிய நான்குபேரை தக்க வைத்துள்ளது. வீரர்கள் ஏலத்திற்கு அந்த அணியிடம் ரூ. 48 கோடி நிதி உள்ளது 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »