Press "Enter" to skip to content

இந்தியா ஓபன் பேட்மிண்டனில் அசத்தல்- அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய நட்சத்திரங்கள்

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், மற்றொரு இந்திய வீரரான பிரனோயை வீழ்த்தினார்.

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துவருகிறார்கள். 

முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், சக வீராங்கனை ஆஷ்மிதா சாலிஹாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் துவக்கம்  முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 36 நிமிடங்களில் 21-7, 21-18 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபநிதா கேத்தாங்கை சந்திக்க உள்ளார்.

இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், பிரனோய் மோதினார்கள். இப்போட்டியில் 14-21 21-9 21-14 என்ற செட்கணக்கில் லக்சயா சென் போராடி வெற்றி பெற்றார். அரையிறுதியில் மலேசியாவின் நிக் சீ வாங்குடன் மோதுகிறார்.

மகளிருக்கான மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அகார்ஜி காஷ்யப், சக வீராங்கனை மாளவிகாவை வீழ்த்தினார். அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை பூசனனை எதிர்கொள்கிறார். பூசனன், காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை லாரன் லாமை வீழ்த்தியிருந்தார். 

இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிரக் ரெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடி காலிறுதியில் சிங்கப்பூர் ஜோடியை வென்றது. 

மகளிர் இரட்டையர் பிரிவில் ஹரிதா-ஆஷ்னா ராய் ஜோடி காலிறுதியில் ருத்ராணி ஜெய்ஸ்வால்- ஜமாலுதீன் அனீஸ் கவுசர் ஜோடியை 21-16 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »