Press "Enter" to skip to content

களத்தில் என்ன நடக்கிறது என்பது வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது – கோலி கருத்து

தென் ஆப்பிரிக்க அணிக்கு போதுமான அழுத்தத்தை கொடுக்காததால் 3வது சோதனை போட்டியில் தோல்வி அடைந்ததாக போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித் தலைவர் கோலி தெரிவித்துள்ளார்.

கேப் டவுன்:

இந்தியாவுக்கு எதிரான 3வது சோதனை போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் டி.ஆர்.எஸ்.முறை குறித்த இந்திய வீரர்களின் கருத்து மற்றும் இந்திய அணியின் தோல்வி குறித்து போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அணித் தலைவர் கோலி பேசியதாவது:

எனக்கும் எந்தக் கருத்தும் இல்லை. களத்தில் என்ன நடந்தது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம், வெளியில் இருப்பவர்களுக்கு மைதானத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய சரியான விவரங்கள் தெரியவில்லை.  நாங்கள் ஆரம்பத்திலேயே மூன்று மட்டையிலக்குடுகளை எடுத்திருந்தால், அதுவே ஆட்டத்தை மாற்றிய தருணமாக இருந்திருக்கும்.  

நிலைமையின் உண்மை என்னவென்றால், இந்த சோதனை போட்டியின் போது நாங்கள் நீண்ட நேரத்திற்கு அவர்கள் மீது போதுமான அழுத்தத்தை கொடுக்கவில்லை, அதனால் நாங்கள் ஆட்டத்தை இழந்தோம். 

ஒரு சர்ச்சையை உருவாக்குவது மிகவும் உற்சாகமாக தோன்றுகிறது.

நான் அதை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை. அந்த தருணத்தில் இருந்து நாங்கள் நகர்ந்து விட்டோம். ஆட்டத்தில் நாங்கள் கவனம் செலுத்தினோம். மட்டையிலக்குடுகளை விரைவாக வீழ்த்த முயற்சி செய்தோம். இவ்வாறு தமது பேட்டியின்போது கோலி குறிப்பிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »