Press "Enter" to skip to content

ஜோகோவிச் இல்லாவிட்டாலும் ஆஸி. ஓபன் களைகட்டும்- ரபேல் நடால் கருத்து

குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்தார்.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடர் வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்க உள்ள நிலையில், செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச், இப்போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்த நிலையில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை ரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.

அதன்பின்னர்,  இந்த தடையை மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட் ரத்து செய்தது. எனினும், குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்தார். இதனால் ஜோகோவிச் மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அத்துடன் அவர் பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவரை நாடு கடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஜோகோவிச்சுகு விசா மறுப்பு குறித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை விட எந்த ஒரு வீரருக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெரியதல்ல என்றார் நடால். ஜோகோவிச் மிகச்சிறந்த வீரர்தான்; அவர் பங்கேற்காவிட்டாலும் ஆஸ்திரேலிய ஓபன் சிறப்பானதாகவே இருக்கும் என்றும் நடால் தெரிவித்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள வீரர்களில் பெடரர் , நடால் ஆகியோருடன் ஜோகோவிச்சும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »