இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் இன்று மலேசிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
புதுடெல்லி:
இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் சுபநிதா கேத்தாங்கை சந்தித்தார்.
இப்போட்டியின் சிந்து முதல் சுற்றை 14- 21 என்ற கணக்கில் இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பி.வி.சிந்து இரண்டாவது சுற்றை 21 – 13 என்ற கணக்கில் வென்றார். இறுதிச்சுற்றில் சிந்து 10-21 என்ற கணக்கில் தோற்றார்.
இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிரக் ரெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஜோடி அரையிறுதியில் பிரான்ஸ் ஜோடியை வென்றது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar