Press "Enter" to skip to content

புரோ கபடி சங்கம் போட்டி: தமிழ் தலைவாஸ் 4-வது வெற்றி பெறுமா? ஜெய்ப்பூர் அணியுடன் இன்று மோதல்

தமிழ் தலைவாஸ் 10-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூரை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர:

8-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 9 ஆட்டத்தில் 3 வெற்றி, 4 டை, 2 தோல்வியுடன் 27 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி 36-26 என்ற கணக்கில் புனே பல்தானையும், 39-33, என்ற கணக்கில் உ.பி.யோதவையும்,45-26 என்ற கணக்கில் அரியா னாவை தோற்கடித்து இருந் தது.

பெங்களூர் அணியிடம் 30-38 என்ற கணக்கிலும், பெங்கால் வாரியர்சிடம் 28-37 என்ற கணக்கிலும் தோற்று இருந்து. தெலுங்கு டைடன்ஸ் (40-40), யு மும்பை (30-30), தபாங் டெல்லி (30-30), பாட்னா பைரேட்ஸ் (30-30) ஆகிய அணிகளுடன் டை செய்திருந்தது.

தமிழ் தலைவாஸ் 10-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூரை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய்ப்பூர் அணி 9 ஆட்டத்தில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா-பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »