Press "Enter" to skip to content

இந்திய அணியில் 3 மாற்றம் செய்ய வேண்டும்- காம்பீர்

பும்ரா, புவனேஸ்வர் குமார், அஸ்வின் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடைசி ஒருநாள் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் காம்பீர் கூறியதாவது:-

பும்ரா, புவனேஸ்வர் குமார், அஸ்வின் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »