சி.எஸ்.கே. அணி 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் இரவு நடக்கிறது.
மும்பை:
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 மட்டையிலக்குடிலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 மட்டையிலக்கு வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் பஞ்சாப் கிங்சிடம் 54 ஓட்டத்தை வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 8 மட்டையிலக்குடிலும் தோற்றது.
சி.எஸ்.கே. அணி 5-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சென்னை அணி முதல் வெற்றிக்காக இன்னும் காத்திருக்கிறது. 4 ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. எஞ்சிய 10 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்றால்தான் பிளேஆப் வாய்ப்பில் இருக்க முடியும். இதனால் இன்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.
மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வெல்ல இயலும். தற்போது பெங்களூரு அணி நல்ல நிலையில் இருப்பதால் அதனை வீழ்த்துவது சவாலானது.
டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி சென்னையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இரு அணிகளும் 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 18-ல், பெங்களூரு 9-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar