Press "Enter" to skip to content

ஐபிஎல்: உத்தப்பா, துபே அதிரடி- 216 ரன்களை குவித்தது சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷிவம் துபே 46 பந்துகளில் 95 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

மும்பை:

ஐ.பி.எல்  தொடரில் இன்று மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும்  22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன .

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணி முதலில் மட்டையாட்டம் செய்தது.  

சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மொயீன் அலி 3 ஓட்டத்தை எடுத்த நிலையில் ஓட்டத்தை அவுட்டானார்.  இதன் பின்னர் ஜோடி சேர்ந்த உத்தப்பா , ஷிவம்  துபேவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

உத்தப்பா 50 பந்துகளில் 4  பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 88 ஓட்டங்கள் அடித்து அவுட்டானார். 

மறுபுறம் துபேவும் 46 பந்துகளில் 5 பவுண்டர்கள், 8 சிக்சர்களுடன் 95  ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 216 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து 217 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரூ அணி களம் இறங்கி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »